Sunday, May 25, 2008

தடயம் - அத்தியாயம் - 11

அவரை கிட்டத்தில் பார்த்ததும் செல்வம் சற்று அதிர்ந்து போனார்.

"இது என்ன கனவா இல்லை நிஜமா? ஜார்ஜ் நீங்க எப்படி இங்க!" என்று இழுத்தார்.

"செல்வம், இது நிஜம்தான். துரை எனக்கு போன் பண்ணி நீங்க ஒரு என்கவுண்டர் பண்ணப் போறதாகவும், அதுக்கு என் உதவி வேணும்னும் சொன்னார். நான் உடனே, என் டீம் ஆளுங்கள கலெக்ட் பண்ணிட்டு அவர் சொன்ன மாதிரி அவங்க 8 பேரை ஹோட்டல் பார்க் ஷெரட்டான் அனுப்பிட்டு நான் இங்க வந்தேன். இதுக்கே இவ்வளவு ஆச்சரியப் படரீங்களே, என் கூட யார் வந்திருக்காங்க தெரியுமா?"

"யார் வந்திருக்காங்க?"

"பாரி சார் வந்திருக்கார்" என்று ஜார்ஜ் சொல்லும் போதே, காரின் பின் சீட்டிலிருந்து பாரி இறங்கினார்.

பாரி - இவர் எக்ஸ் கமாண்டோ, இவர் பிரதமரோட பூனைப் படையில சீனியர் செக்யூரிடி பிரிவில் இருந்தவர், தற்சமயம் ஸ்பெஷல் ட்யூடியா, தமிழ்நாட்டு போலீஸோட என்கவுண்டர் டீமுக்கு ட்ரைய்னிங் கொடுக்கரார். இவரைப் பத்தி தெரிஞ்சவங்க சொல்றது இவர் ரவுடிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் டெரர். இவரைப் பார்த்ததும் செல்வத்துக்கு பேச்சே வரவில்லை.

"என்ன செல்வம், ஒன்னும் பேச்சே இல்லை, நான் வந்தது பிடிக்கலையா?"

"பாரி சார், என்ன இப்படி கேக்கரீங்க, உங்க கூட வொர்க் பண்றது எவ்வளவு பெரிய சான்ஸ், அதை யோசிச்சு மலைச்சு போயிட்டேன். நீங்க எப்படி இங்க..."

"துரைகூட ஒரு மீட்டிங்ல இருந்தேன், அப்ப உங்க போன் வந்தது, நானும் ஜார்ஜ்கூட போய் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன், ஒரு 6 பேர ஜார்ஜோட ஆளுங்க கூட அனுப்பிட்டேன். இன்னொரு விஷயம், நீங்க யாருக்கோ வயர்லெஸ் மைக் செட் பண்ணனும்னு கேட்டீங்களாம், கொண்டு வந்திருக்கோம், பண்ணிடலாமா?"

"AC சந்தானத்தின் சர்ட் பட்டனில ஒன்னும் முடிஞ்சா அவருடைய ஷீவில ஒன்னும் வெக்கலாமா?"

"கண்டிப்பா. அவரை மீட் பண்ணலாமா?"

"வாங்க. அதுக்கு முன்னாடி நான் சொன்னதெல்லாம் கிடைச்சுதா"

"யெஸ் செல்வம்"

"குட், 8 மணிக்கு ஹோட்டல் பார்க் ஷெரட்டான் பின்னாடி நிக்கப் போற ஆட்டோவுல டிப்பார்ட்மெண்ட்ல இருந்து அருளும் AC சந்தானமும் போகப் போராங்க, அவங்க பாதுக்காப்புக்காகவும், அவங்க காப்பாத்த போற இன்னும் ரெண்டு பேருக்காகவும்தான் இந்த ஏற்பாடெல்லாம்."

"ஆட்டோவை ட்ரேஸ் பண்ணியாச்சா?"

"ஆட்டோ நம்பர் TN - 09 - 7916 இதை ட்ரேஸ் பண்ணச் சொல்லியிருக்கேன், அதுல ஒரு ட்ராக்கிங் டிவைஸ் வெக்க சொல்லியிருக்கேன். அது விவரம் இன்னும் ஒரு சில நிமிஷத்தில தெரிய வரும்."

"ட்ராக்கிங் வேன் நாங்க இங்க கிளம்பி வரும்போதே கிளம்பியாச்சு"

"எஸ், இப்பதான் எனக்கும் தகவல் வந்துச்சு, ட்ராக்கிங் வேனை ஹோட்டல் பக்கத்தில நிக்க வெச்சாச்சு. சந்தானம் சார், மைக் வெச்சுட்டு டெஸ்ட் பண்ணி பாக்கனும்னு சொல்வாரு, அதுக்கு ஆயத்தமா வந்திருக்கீங்களா"

"எஸ்"

"குட், நாம மூனு பேரும் உள்ள போய் மைக் செட் பண்ணுவோம், மத்தவங்க இங்கயே இருக்கட்டும். நாம மைக் செட் பண்ணிட்டு வந்ததும் கிளம்பனும் "

"வாங்க செல்வம்" என்ற சந்தானம், செல்வத்துடன் வந்த ஜார்ஜையும் பாரியையும் பார்த்தவுடன் அவருடைய ஆச்சர்யத்தை அடக்க முடியாமல், "வாவ், ஜார்ஜ், பாரி என்னது இது பெரிய யுத்ததுக்கே தயாராகிட்டீங்க போல இருக்கு! செல்வம் இவங்கள எப்படி டீம்ல சேர்த்தீங்க?"

"சார், நான் இவங்களை டீம்ல சேர்க்க ரொம்ப மெனக்கெடலை. துரை தான் இந்த ஏற்பாடெல்லாம் செய்தது. கவலையே படாதீங்க தேவராஜையும் அருளோட மகள் ஸ்ரீநிதியையும் பத்திரமா கொண்டு வந்திடலாம். உங்களுக்குததான் தெரியுமே, பாரி எலக்ட்ரானிக்ஸ் விஷயத்திலயும் எக்ஸ்பர்ட்ன்னு, இவர் வயர்லெஸ் மைக் செட் கொண்டு வந்திருக்கார். இப்போ உங்களுக்கு வயர்லெஸ் மைக் செட் பண்ணி டெஸ்ட் பண்ணிடுவார், அதுக்கப்பறம் நீங்க கிளம்பலாம்."

"குட், எனக்கு மைக் செட்டை ஷர்ட் பட்டனிலும், கால் ஷூவிலேயும் வெச்சுடுங்க. பாரி, வெப்பன்ஸ் ஏதாவது எடுத்துகிட்டு போக வழியிருக்கா?"

"ஷூர். ஒரு சின்ன கத்தி செட் இருக்கு அதை ஒரு ஷூக்கு அடிப்புறம் வெச்சிடலாம், அதை கண்டு பிடிக்கரது கஷ்டம், தேவைப் படரபோது பின்னங்காலை அழுத்தினா முன் பக்கம் கத்தி வரும் எதிராளியை எட்டி உதைச்சா ஒரு 6 இன்ச் அவனை பதம் பாத்திடும். ரொம்ப கூர்மையான கத்தி. திரும்பியும் பின்னங்காலை அழுத்தினா கத்தி உள்ள போயிடும். அதை நான் செட் பண்ணிடறேன்."

"அதை என் ஷீவில வெக்க முடியுமா?"

"நோ, அதுக்கு ஸ்பெஷல் ஷீ வேணும், உங்க ஷூ சைஸ் என்னன்னு சொல்லுங்க, என் ஜீப்ல இருக்கான்னு பாக்கரேன்."

"என் ஷீ சைஸ் 10"

"வெரிகுட். என் கிட்ட 10 நம்பர் ஷீ இருக்கு, அதுதான் என் ஷீ சைசும். நான் போய் ஜீப்ல இருந்து கொண்டு வர்றேன்".

"எக்ஸலண்ட், செல்வம், எனக்கு தேவராஜை ஒரு ஆபத்தும் இல்லாம கூட்டிகிட்டு வந்திடலாங்கர நம்பிக்கை வந்திடுச்சு."

"சார், நீங்க தைரியமா இருக்கரத பாக்கரப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதே சமயம் பைக் குமாரை கொலை செய்தது அந்த கும்பலா இல்லாம தேவராஜா இருந்தா, நாம தேவராஜ காப்பாத்தினாலும், நான் அவரை அரஸ்ட் பண்ண வேண்டியிருக்கும்."


"டாமிட், நான் கொஞ்சம் தைரியமா இருந்தா உங்களுக்கு பொறுக்காதே, உடனே இப்படி ஏதாவது டார்ச்சர் கொடுத்தாகனுமே" என்று சிடுசிடுத்தார்.

செல்வம் மறுப்பேதும் சொல்லாமல் அமைதியாக சந்தானத்தை பார்த்தார்.

ஜார்ஜ், இந்த விவாதத்தில் செல்வம் சற்றும் சலனமில்லாமல் இருப்பதை சட்டென்று மனதிலேயே நோட் செய்து கொண்டு செல்வத்தைப் பார்த்து மெலிதாக புனனகைத்தார். அதற்கு செல்வம் கண்ணாலேயே ஏதோ சொல்ல அதை ஜார்ஜ் ஆமோதிக்கும் வகையில் முகத்தை வேறு பக்கம் திருப்புவது போல் தலையசைத்தார். இது சந்தானத்தின் பார்வையில் படவில்லை.

அப்போது பாரி உள்ளே வந்தபடியே, "சந்தானம் சார், இந்த ஷூவை ட்ரை பண்ணிப் பாருங்க, அப்படியே கொஞ்சம் கத்தியை வெளிய எடுக்க ப்ராக்டிஸ் பண்ணுங்க" என்றார்.

சந்தானம் ஷீவைப் போட்டு பார்த்து விட்டு, "எனக்கு சரியா இருக்கு, அந்த கத்தியை எடுத்து பார்க்கிறேன்" என்றபடி பாரி சொன்னது போல பின்னங்காலை அழுத்தி கத்தியை வெளி கொண்டு வந்து விட்டு, மறுபடி அழுத்தி கத்தியை உள்ளே மடக்கி, இதை மேலும் இரண்டு முறை செய்து பார்த்தார். பிறகு பாரியைப் பார்த்து, "பாரி, ப்யூட்டிபுல், இது ரொம்ப சரியா வரும் போல இருக்கு. நீங்க மைக் வெச்சுடுங்க, நாங்க கிளம்பர நேரமாயிடுச்சு" என்றார்.

பாரி சந்தானத்தின் சர்ட் பட்டனின் பின்புறம் ஒரு மைக்கும், ஷீவின் உள்புறம் ஒரு மைக்கும் வைத்தார். பின் கையில் இருந்த ஒரு வாக்கி டாக்கி மூலம் தனது உதவியாளரை அழைத்து ட்ராக்கிங் மற்றும் ரெகார்டிங் மெஷினை ஆன் செய்ய சொல்லி அதை டெஸ்ட் செய்ய சொன்னார், அவருடைய பதிலை கேட்டு பிறகு சந்தானத்தை பார்த்து,

"சந்தானம் சார், மைக் ரெண்டும் சரியா வேலை செய்கிறது. நீங்களும் அருளும் கிளம்பலாம், நாங்க எல்லாரும் முதல்ல கிளம்பி போயிடுவோம், ரெண்டு கான்ஸ்டபிள்ஸ்ஸ மஃப்டில இங்க தெரு முனையில நிக்க வெச்சுட்டு வந்திருக்கோம், அவங்க உங்க காரை யாருக்கும் தெரியாம தொடர்ந்து வருவாங்க, நடுவுல யாராவது உங்கள தாக்கவோ அல்லது வழி மறிக்கவோ ப்ளான் பண்ணினா அவங்க ரெண்டு பேரும் உங்களை காப்பத்துவாங்க"

"ரெண்டு பேர் எப்படி எங்களை காப்பாத்த முடியும்"

"அவங்க ரெண்டு பேரும் என்னோட டாப் ஸ்டூடண்ட்ஸ், அவங்க ரெண்டு பேர் சேர்ந்தா ஒரு 20-30 பேருக்கு சமம். அதோட அவங்க எது நடந்தாலும் எனக்கு தகவல் சொல்லிடுவாங்க, நான் ஒரு 3-4 நிமிஷத்தில அங்க வந்திடுவேன். இப்ப நாங்க கிளம்பரோம்" என்றபடி வெளியில் செல்ல ஆரம்பித்தார். அவர் செல்வதைப் பார்த்து விட்டு ஜார்ஜும் கிளம்பி சென்றார்.

செல்வம், சந்தானத்துக்கு விரைப்பாக ஒரு சல்யூட் அடித்து விட்டு, "சார் நாங்க அடுத்து உங்களை அவங்க இடத்திலதான் பார்ப்போம். நடுவில பார்த்தாலும் உங்களை கண்டுக்காமல் இருப்போம். நாங்க போலீஸ் ட்ரெஸில் வராமல் மஃப்டியில் வருவோம்" என்ற சொல்லிவிட்டு அவருடைய பதிலுக்கு காத்திராமல் ஜார்ஜ் மற்றும் பாரியுடன் சேர்ந்து கொண்டு வெளியில் சென்றார்.


(தொடரும்)

Saturday, May 17, 2008

தடயம் அத்தியாயம் - 10

"டாமிட், சொல்லுங்க அருள். மாட்டிகிட்டு இருக்கிறது உங்க மகள் மட்டும் இல்லை, என் அக்கா மகன் தேவராஜும்தான். ரெண்டு பேரையும் கடத்தியிருக்கிறது ஒரே கும்பல்தான். நீங்க தயங்கர ஒவ்வொரு நிமிஷமும் அவங்க உயிருக்கு ஆபத்து. So, சீக்கிரம் சொல்லுங்க" என்று இறைந்தார் சந்தானம்.

"சரி, இனிமே மூடி மறைச்சு ஒன்னும் ஆகப் போகரதில்லை, நடக்கரது நடக்கட்டும். அவங்க டிமாண்ட் என்னன்னா, நீங்களும் நானும் தனியா அவங்க சொல்ற ஒரு இடத்துக்கு வரனும். வரும்போது, கூட செல்வமோ அல்லது வேற யாராவதோ வந்தா என் மகளை உயிரோட பார்க்க முடியாது. கைல துப்பாக்கியோ அல்லது வேறு ஏதாவது ஆயுதமோ கொண்டு வரக்கூடாது. அப்படி கொண்டு வந்தா நாமளே உயிரோட அவங்க சொல்ற இடத்தில இருந்து திரும்பி வர முடியாது. அவங்க தேவராஜப் பத்தி ஒன்னும் சொல்லலை, அதனால அவங்ககிட்ட தான் தேவராஜ் இருக்காரான்னு தெரியலை. இருக்கலாம், ஆனா கன்பர்ம்ட்டா சொல்ல முடியாது. செல்வம் கண்டிப்பா நம்ம கூட வரமுடியாது என்ன பண்றது சொல்லுங்க?"

"அருள், செல்வத்தைப் பத்தி நீங்க கவலைப் படாதீங்க, அவர் நம்ம கூட வரமாட்டார், ஆனா அவர் நம்மள யாருக்கும் தெரியாம பின் தொடர்ந்து வருவார், தேவையான டைம்ல கரெக்ட்டா உள்ள பூந்து அந்த ஆளுங்களை பிடிப்பார். போதுமா"

"இருந்தாலும் ...." என்று இழுத்தார் அருள்மொழி.

"அருள்மொழி சார், சந்தானம் சார் சொன்னா மாதிரி, நான் யாருக்கும் தெரியாம உங்களை தொடர்ந்து வருவேன், சரியான சமையத்தில நானும், எங்க ஆளுங்களும், அவங்களைப் பிடிச்சிடுவோம்."

"சந்தானம் சார், நான் சி.டி.சி.ஐ.டி. ஆஃபீஸுக்கு போன் பண்ணி தகவல் சொல்றேன். எப்படியும் ஒரு 30-45 நிமிடத்தில நாம கிளம்பிடலாம்"

"குட். அந்த ஏற்பாட்டை நீங்க பாருங்க, நான் அவங்களைப் பிடிக்கரதுக்கு இன்னோரு ஐடியா வெச்சு இருக்கேன். என் பாண்ட் பட்டன்லயும், என் ஷர்ட் காலர் பட்டன்லயும் வையர்லெஸ் மைக்ரோ போன்ஸ் வெச்சிடுங்க. ரிசப்ஷன் எப்படி இருக்குன்னு கொஞ்சம் டெஸ்ட் பண்ணிடுங்க. ரிசப்ஷன் பார்ட்டிகளை ஒரு வேன்ல எங்க காரை தொடர்ந்து வரச் சொல்லுங்க. யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி ஒரு டப்பா வேனை யூஸ் பண்ணுங்க. நமக்குள்ள ஒரு கோட் வேர்ட் வெச்சுக்கலாம். ம்... எனக்கு பசிக்குது சாப்பிட ஏதாவது கிடைக்குமான்னு நான் அவங்களை கேட்டா அதுதான் உங்களுக்கு சிக்னல், ஓகே, உடனே உள்ள வந்திடுங்க. குறைந்த பட்சம் 15-20 ஆளுங்கள கூட்டிகிட்டு வாங்க"

"ஓகே சார்" என்றபடி செல்வம் செல்போனில் சி.டி.சி.ஐ.டி. ஆஃபீஸுக்கு தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தார்.

அவர் பேசும் போது சந்தானமும் அருளும் அவரையே பார்த்தபடி இருந்தனர். செல்வம்
போனில் பேசி முடித்து விட்டு அவர்கள் பக்கம் திரும்பியதும், சந்தானம் அருளைப் பார்த்து
பேசத் துவங்கினார். "அருள், எத்தனை மணிக்கு, எங்க வரனும்னு அவங்க சொன்னாங்களா?"

"ராத்திரி 8 மணிக்கு, அடையார் பார்க் ஷெரட்டான் ஹோட்டலுக்கு பின் புறம் இருக்கிற சந்துல ஒரு ஆட்டோ நிக்கும் அதோட ட்ரைவர்கிட்ட ஒரு 500 ரூபாய் கொடுத்து அதுக்கு எவ்வளவு தூரம் போகலாமோ அங்க போகனும்னு சொன்னா அவன் நம்மள இந்த கும்பல் இருக்கர இடத்துல கொண்டு போய் விட்டுடுவான்."

"அருள், ராத்திரி 8 மணிக்கு அந்த ஹோட்டல் சந்துல 10-15 ஆட்டோ நிக்கும் அதுல இந்தக் கும்பல சேர்ந்த ஆட்டோ எதுன்னு எப்படி கண்டு பிடிக்கரது"

"சந்தானம் அவங்க ஆட்டோ நம்பர் சொல்லியிருக்காங்க. அது TN - 09 - 7916"

"செல்வம், அந்த ஆட்டோவை ட்ரேஸ் பண்ணி அது யாரோடது, என்ன அட்ரெஸ், எல்லா டீடெயில்ஸும் சேகரியுங்க.

"யெஸ் சார்"

செல்வம் சி.டி.சி.ஐ.டி. ஆஃபீஸுக்கு மறுபடி தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தார், அப்போது ஆட்டோ நம்பரையும் தந்தார். பிறகு அவர்களிடம் சற்று நேரம் பேசிவிட்டு சந்தானம் பக்கம் திரும்பினார்.

அதை குறிப்பால் உணர்ந்த சந்தானம் "அருள் நீங்க ரெடியாகுங்க, நான் செல்வத்துக்கிட்ட பேசிட்டு வந்ததும் நாம கிளம்பலாம்"

"செல்வம், வாங்க நாம வாசலுக்கு போய் பேசலாம்"

"செல்வம், இது ஒரு பயங்கரமான கும்பல் மாதிரி தெரியுது, நீங்க கொஞ்சம் ஜாக்ரதையா இந்த விஷயத்தை ஹாண்டில் பண்ணனும். அவங்க கிட்ட மாட்டிகிட்டு இருக்கரது அருளோட மகள் மட்டும் இல்லை நம்ம தேவராஜும்தான். நான் அருளை கூட்டிகிட்டு அவங்க சொன்ன மாதிரி அந்த ஆட்டோவை பிடிச்சு அவங்க இடத்துக்கு போறேன், நீங்க அந்த ஆட்டோவை தொடர்ந்து வாங்க. நான் அவங்க இடத்துக்கு போனதும் அவங்க என்னை கண்டிப்பா ஏதாவது மைக்ரோஃபோன் இருக்கான்னும், ஆயுதம் இருக்கான்னும் பார்ப்பாங்க, அதனால ஆயுதம் இல்லாமதான் நான் போகப் போறேன். மைக்ரோஃபோன் இல்லாம போகமுடியாது, அந்த ரிஸ்க் நான் எடுத்துதான் ஆகனும். வேற என்ன பண்ணலாம்னு ஏதாவது தோணுதா?"

"சார், ப்ளான் இதுவரைக்கும் சரியாதான் இருக்கு, ஆனா...."

"என்ன இழுக்கரீங்க சொலுங்க"

"ராத்திரி நேரத்தில ஒரு ஆட்டோவை பின் தொடர்ந்து வரது ரொம்ப கஷ்டம், அதனால்..."

"அதனால என்ன? சொல்லுங்க"

"நான் ரெண்டு கான்ஸ்டபிள்ஸ தனித்தனியா ரெண்டு பைக்ல ஆட்டோவை தொடர்ந்து போகச் சொல்றேன், நானும் ரெண்டு டீம் ஆளுங்களும் ஒரு நாலு கார்ல அந்த ஆட்டோவை தொடர்ந்து வருவோம். ஒரு வேளை நாங்க மிஸ் பண்ணினாலும், பைக்ல வரவங்க மிஸ் பண்ண மாட்டாங்க. அவங்க எங்களுக்கு ஆட்டோ போகிற இடத்தை சொல்லிடுவாங்க. நாங்க உங்க சிக்னலுக்கு வெயிட் பண்ணுவோம், சிக்னல் கிடைக்கரதுக்குள்ள உள்ள நுழையரதுக்கு ஏதாவது சான்ஸ் கிடைச்சுதுன்னா அதை பயன் படுத்திப்போம்"

"குட், எப்ப வயர்லெஸ் மைக் வருது"

"என் டீம் ஆளுங்க இங்க எடுத்துட்டு வர்ராங்க, இன்னும் ஒரு 10-15 நிமிஷத்தில கிடைச்சிடும். வந்ததும் செட் பண்ணி டெஸ்ட் பண்ணிடலாம்."

"ஓகே, நான் உள்ள போய் அருளை தயார் பண்றேன், நீங்க மைக் கிடைச்சதும் சொல்லுங்க"

சந்தானம் உள்ளே போனதும், செல்வம், செல்போனில் டீம் எங்கிருக்கிறது என்பதையும், மற்ற விஷயங்களையும் உறுதி செய்து கொண்டார். பிறகு அவ்ர் துரைக்கு போன் செய்து அனைத்து விஷயத்தையும் சொல்லி அவரோடு சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார், அப்போது ஒரு ஜீப் வரவும் துரையிடம் சொல்லிவிட்டு அந்த ஜீப்பை நோக்கி ஓடினார்.

அவர் ஓடி வருவதை பார்த்த ஜீப்பிலிருந்தவர்கள் சற்று திகைப்படைந்தாலும், சுதாரித்துக் கொண்டு ஜீப்பின் ட்ரைவர் சீட்டிலிருந்து ஒருவர் சற்று விரைப்பாக நின்றார்.

அவரை கிட்டத்தில் பார்த்ததும் செல்வம் சற்று அதிர்ந்து போனார்.

"இது என்ன கனவா இல்லை நிஜமா? நீங்க எப்படி இங்க!" என்று இழுத்தார்.

(தொடரும்)